விளையாட்டாய் சில கதைகள்: புச்சிபாபுவும் சென்னை கிரிக்கெட் வரலாறும்
சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்ததற்கும், புச்சிபாபுவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. புச்சிபாபுவின் முயற்சியால்தான் 1888-ம் ஆண்டில் சென்னையில் ’மெட்ராஸ் யுனைடட் கிரிக்கெட் கிளப்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
ஆங்கிலேய அரசில் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளராக) இருந்த மோதரவரப்பு தேரா வெங்கடசாமி என்ற செல்வந்தரின் பேரன்தான் புச்சிபாபு. சென்னையில் தங்கியிருந்த வெங்கடசாமி, பெரும் செல்வந்தராக இருந்தார். சிறுவயதில் தனது பேரன் புச்சிபாபுவை கவனித்துக்கொள்ள வெள்ளைக்கார பெண் ஒருவரை அவர் வேலைக்கு வைத்திருந்தார். தினமும் மாலை வேளைகளில் புச்சிபாபுவுக்கு விளையாட்டு காட்டுவதற்காக, அந்த பெண் வெளியில் அழைத்துச் செல்வார். அந்தப் பெண்ணுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் வெள்ளைக்கார இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் இடத்துக்குத்தான் பெரும்பாலும் புச்சிபாபுவை அழைத்துச் செல்வார்.
Comments
Post a Comment