சிட்னி டெஸ்ட்டில் நானும், விஹாரியும் என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாமல் ஆஸி. வீரர்கள் திணறினர்: அஸ்வின் கலகலப்புப் பேச்சு
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் நானும், விஹாரியும் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்திய நுட்பங்கள் வித்தியாசமாக இருந்தன என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
Comments
Post a Comment